புதுடில்லி: நாட்டில் ஊரடங்கு அமலில் உள்ள இந்த நேரத்தில், அத்தியாவசிய தேவைகளான உணவு, தங்கும் இடங்களை கூகுள் மேப்பில் தெரிந்து கொள்ளலாம் என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து கூகுள் நிறுவனம் வெளியிட்டஅறிக்கை: இந்தியாவில் தற்போது 30 நகரங்களில் இச்சேவை வழங்கப்படுகிறது. ஆங்கிலத்தில் மட்டும் வழங்கப்பட்டு வரும் இச்சேவை, எதிர்வரும் காலங்களில், மாநில மொழிகளில், இந்தியாவின் பல பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். நிவாரண முகாம்கள் உள்ள பகுதிகளை கண்டறியவும், மத்திய மாநில அரசுகளுடன் இணைந்து கூகுள் பணியாற்றி வருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Advertisement
Advertisement
Advertisement